இறுதி நபி (ஸல்) உயர்தோனை நோக்கி புறப்படுதல்,
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS0gPS5QD1n-W8uhUE-JQbfmMav2Wy50jSO_vZzAPa1OMFFp2dBmo-41fbEwinQ88PDiEiYghrSdoynX_5ELxwtCxSjkokj0uf20XCM8-x3-BKpN4eNhwbOP-Nlj0IZY3749DZhB8Zhq4FSh52F77-DKfoz6MN7770sbmBTYxBb5Hh_Wag3e9aieD9s7o/s320/kmc_20230830_234703.png)
இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "உயர்ந்தோனை" நோக்கி புறப்படுதல், 😪😥😢😭 இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன,! புறப்படுவதற்கான அறிகுறிகள்,! அழைப்புப் பணி நிறைவுற்று, இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி (ஸல்) அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன. ஹிஜ்ரி 10, ரமழான் மாதத்தில் நபி (ஸல்) இருபது நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இம்முறை வானவர் ஜிப்ரயீல் நபியவர்களிடம் வந்து இருமுறை குர்ஆனைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதி ஹஜ்ஜில் ‘இந்த ஆண்டிற்குப் பின் இந்த இடத்தில் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம்’ என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள். ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) நிற்கும் போது “உங்களது வணக்க வழிபாடுகளை, ஹஜ் கடமைகளை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டிற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்கு வர முடியாமல் போகலாம்” என்றும் கூறியிர