Posts

குர்பானி எனும் உன்னத வணக்கத்தை நிறைவேற்றுவோம்

Image
குர்பானி எனும் உன்னத வணக்கத்தை நிறைவேற்றுவோம்; குர்பானி அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய ஓர் வணக்கம்: அல்லாஹ் கூறுகின்றான்: “எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (அல்-குர்ஆன் 108:2) மேலும், குர்பானி எனப்படும் அறுத்துப் பலியிடும் வணக்கத்தை தனக்காக மட்டும் நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ் தனது திருமறையில் வலியிறுத்தியிருக்கின்றான். “நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.” (அல்-குர்ஆன் 6:162) அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய குர்பானியை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தால் அது இணைவைப்பாகும்: “அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக” அறிவிப்பவர்: அலி (ரலி); ஆதாரம்: முஸ்லிம். எனவே, குர்பானி என்பது அல்லாஹ் ஒருவனுக்கே நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும் என்பதை நன்கு நினைவில் கொள்ள வேண்டும. யார்மீது கடமை? குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும்

ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,!

Image
  ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,! ● இஸ்லாத்தின் கடமைகள் யாவை.? ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்கு ஐந்து காரியங்கள் கடமையாகின்றன.  1) கலிமா ஷஹாதத் (அதாவது முஸ்லிம் என்கின்ற பதவிப் பிரமாணம்) 2) தொழுகை (இறைவனை தினமும் ஐந்து வேளை வணங்குதல்) 3) நோன்பு (பசி, தாகம், இச்சை, இவைகளை விட்டு விலகி இருத்தல்) 4) ஜகாத் (மார்க்க வரி) 5) ஹஜ் யாத்திரை ( இறை இல்லம் காபாவை தரிசித்தல்) ● நான்காவது கடமை ஜகாத்தை பற்றி அல்லாஹ்வின் கட்டளை,! وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ   தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள் திருக்குர்ஆன்  2:43 وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ  தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். திருக்குர்ஆன்  2:110 ● எந்த அளவு செல்வம் இருந்தால்

இரவுத்தொழகை "20" ரக்அத்துகளா அ‌ல்லது "8" ரக்அத்துகளா ஹதீஸ்க்கள் ஓர் பார்வை

Image
  இரவுத்தொழகை "20" ரக்அத்துகளா அ‌ல்லது "8" ரக்அத்துகளா ஹதீஸ்க்கள் ஓர் பார்வை கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.  1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்)  3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை)  4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை)  ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்கு 70 % ஆலிம்கள் மக்களிடத்தில்   தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை. உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்களா உண்மை என்னவென்றால், உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்களை உருவாக்கித் தந்தார்கள் என்ற இவர்களது வாதம்.  உமர் (ரலி) அவர்கள் தொடர்பான செய்திகளை முழுமையான கவனத்துடன் ஆய்வு செய்யத் தவறியதால் இத்தகைய முடிவுக்குச் சிலர் வந்து விட்டனர். எனவே உமர் (ரலி) அவர்கள் தொடர்பான 20 ரக்அத்கள் பற்றிய அறிவிப்புக்களை ஓரு பார்வை,