ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,!
ஜகாத் கொடுப்போம்,! நம் செல்வத்தை தூய்மைப்படுத்துவோம்,! ● இஸ்லாத்தின் கடமைகள் யாவை.? ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்கு ஐந்து காரியங்கள் கடமையாகின்றன. 1) கலிமா ஷஹாதத் (அதாவது முஸ்லிம் என்கின்ற பதவிப் பிரமாணம்) 2) தொழுகை (இறைவனை தினமும் ஐந்து வேளை வணங்குதல்) 3) நோன்பு (பசி, தாகம், இச்சை, இவைகளை விட்டு விலகி இருத்தல்) 4) ஜகாத் (மார்க்க வரி) 5) ஹஜ் யாத்திரை ( இறை இல்லம் காபாவை தரிசித்தல்) ● நான்காவது கடமை ஜகாத்தை பற்றி அல்லாஹ்வின் கட்டளை,! وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள் திருக்குர்ஆன் 2:43 وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ ۗ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். திருக்குர்ஆன் 2:110 ● எந்த அளவு செல்வம் இருந்தால்