Posts

Showing posts from October, 2023

ரபீவுல் ஆகிர்ரும் முஹ்யித்தீன் ஆண்டவரும்,

Image
  ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்தாலே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கேறும் வழிகெட்ட அனச்சாரங்கள் மௌலிது மற்றும் பெரு விழா ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டது.  முஹ்யித்தீன் ஆண்டவர்(?) ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91 வது வயதில் வபாத்தானார்கள். அன்னாளில் விழா கொண்டாட்டங்கள் குதூகலத்துடன் தொடங்கப்போகின்றன. இதயத்தில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச ஈமானும் கொடிமரங்களில் இனி தஞ்சமடையப் போகின்றன. (நவுது பில்லாஹ்) அல்லாஹ் நம்மைக் காப்பானாக.  தூய இஸ்லாத்தில் இல்லாத திருவிழாக்களும் வழிகேடுகளும் மாற்றார் எள்ளி நகையாடும் விதத்தில் முஸ்லிம்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களால் இன்னமும் அரங்கேற்றப் படுவதைக் கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே! அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் அந்தந்த ஊர்களில் தான் நடக்கின்றன. ஆனால் தமிழகமெங்கும்

ரமளான் மாதம் கலீஃபா அலி (ரலி)அவர்களின் மறைவு நினைவு நாள்,

Image
இஸ்லாமிய வரலாற்றின் காலச்சுவடு.  அமீருல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தளபதி) அலீ இப்னு அபீ தாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மறைவு நினைவு நாள், ஹிஜ்ரி 40 ரமளான் 17 வெள்ளிக்கிழ‌மை பஜர் தொழுகையின் போது, அலி (ரலி), முஆவியா (ரலி), மற்றும் அம்ருப்னுல் ஆஸ் (ரலி) ஆகிய மூன்று பேரையும் ஒரே நாளில் ஒரே சமயத்தில் கொலை செய்ய திட்டம். நஹர்வான் யுத்தத்திற்குப் பிறகு உயிர் பிழைத்த காரிஜிய்யாகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்காவிற்கு வந்து அங்கு தஞ்சமடைந்து கொண்டார்கள். மக்காவை சிரியத் துருப்புக்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த சமயத்தில், மக்காவாசிகள் முஆவியா (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்து கொண்டார்கள் அல்லவா, பின்னர் சிரியாவாசிகளை அலி (ரலி) அவர்களின் படைகள் மக்காவிலிருந்து துரத்தி விட்ட பொழுது மீண்டும் மக்காவாசிகள் அலி (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்து கொண்டார்கள். இந்த நடைமுறையில் கூட காரிஜிய்யாக்கள் வித்தியாசமான முறையில் அணுகினார்கள்.., என்ன இவர்கள் பைஅத் என்ற நடைமுறையைக் கேலிக் கூத்தாக அல்லவா ஆக்குகின்றார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை இந்தப் பூமியில் நிலைநிறுத்துவதை விட்டு விட்டு, தங்களது சுய ஆதிக்